விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் விஜய பிரபாகரன்

விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் விஜய பிரபாகரன்

விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தமிழக நிலைவரப்படி தி.மு.க. 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. 1 தொகுதியிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பாக விஜயபிரபாகரனும் என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும் இந்தியா கூட்டணி சார்பாக தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )