அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை!

அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

இதையடுத்து பாராளுமன்றில் சாசலப்பு ஏற்பட்டது.

சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,

‘என்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்தனர். எனது அடையாள அட்டையை கேட்டனர்.

நான் ஒரு பாராளுமன்றஉறுப்பினர். என்னுடைய அடையாள அட்டை பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தால் தரப்பட்டதற்காலிக அட்டை என்னிடம் உள்ளது எனக் கூறி அதனைக்காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க
மறுத்துவிட்டார் ‘ என்றார்.

இதனையடுத்து, குறுக்கிட்டசபாநாயகர், அர்ச்சுனா எம்.பியைப்
பார்த்து ‘உங்களுடைய அடையாள அட்டை பாராளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள்தான் பெற்றுக்கொள்ள தவறியுள்ளீர்கள்’
என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,

‘நான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், எனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டனர்.

பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்த பாராளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இதுதொடர்பில் வெட்கப்பட வேண்டும்’ என்றார்.

இதன்போது, இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

‘ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக்
கொள்ள முடியாது. சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்று வதை இந்த சபை எப்படி அனு மதிக்கின்றது? இங்கு பாகுபாடு இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றார்.

இதனையடுத்து உரையாற்றிய சபாநாயகர்,

‘நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும்.

இதில் பாகுபாடு இல்லை. அர்ச்சுனா எம்.பி. சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும்’ என்றார்.

எவ்வாறாயினும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இந்த உரைகளை ஹன்சாட்டில்
இருந்து நீக்குவதால் பயனில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்
அர்ச்சுனா பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றும் இந்த
நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும்
என்றும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )