
காங்கேசன்-நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை-நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை ஆரம்பமாகிறது.
சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி
இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில்
காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தைச்
சென்றடையும்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்தில் 6
நாட்கள் சேவையில் ஈடுபடும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.