மழையுடனான வானிலையால் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் !

மழையுடனான வானிலையால் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் !

மழையுடனான வானிலை காரணமாக 160 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலைகளும் களனி கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றும் ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட 21 பாடசாலைகளும் மத்துகம கல்வி வலயத்திற்குட்பட்ட 9 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, கொடிகாவத்த மற்றும் கொலொன்னாவ கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் முகாம்களாக செயற்படும் பாடசாலைகள் இன்றும் மூடப்படும் என மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹலியகொட வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நிவித்திகல வலயத்திற்குட்பட்ட எலபாத்த மற்றும் அயகம பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )