துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த புத்தகத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது

துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த புத்தகத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய சந்தேகநபர் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த புத்தகத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்கள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சஞ்சீவ சமரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ கணேமுல்ல 2009 ஆம் ஆண்டு முதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

இவர் சுமார் 30 கொலைகளை செய்துள்ளார், அதில் கம்பஹா பாஸ் போட்டா கொலையும் அடங்கும்.

இந்த நிலையில், சஞ்சீவ சமரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையம் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்று காலை புஸ்ஸா சிறைச்சாலையில் இருந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்ற அறையில் சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரொருவரே கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கணேமுல்லே சஞ்சீவ உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சீவ குமார சமரத்ன என்ற கணேமுல்லே சஞ்சீவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.

வழக்கறிஞராக வந்த நபரை சுட்டுக் கொன்றவரைக் கண்டுபிடிக்க நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வரை நீதிமன்ற அறையில் போலீஸார் கண்டுபிடித்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் திரு.சுனில் வட்டகலவும் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )