தலைப்பிறை தென்பட்டது : புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு !

தலைப்பிறை தென்பட்டது : புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு !

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்கும் மாநாடு இன்று  7ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என  கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு பிரதித்  தலைவர்  மௌலவி அஷ் ஷெய்க் ஏ.எல்.எம் றிலா அவர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

17ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின  பிரதி நிதிகள், கொழும்பு பெரிய  பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள   அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி  பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள்  மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )