இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபாய் இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (13)  கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஹிரியால அம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 28 வயதுடைய இருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )