கல்விச் சமூகத்தை கட்டி எழுப்ப எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவிகளை வழங்குவேன் – கலாநிதி ஜனகன்

கல்விச் சமூகத்தை கட்டி எழுப்ப எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவிகளை வழங்குவேன் – கலாநிதி ஜனகன்

கொழும்பு வெல்லம்பிட்டி கோகிலாவத்தையில் அமைந்துள்ள KJM சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில், அப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) கொத்தோட்டுவ நாஸ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு KJM சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் குழாமின் அழைப்பிற்கு அமைய IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ,உலர் உணவுப் பொருட்களை மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும் , கல்விச் சமூகத்தை கட்டி எழுப்ப எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன்னால் முடியுமான உதவிகளை வழங்குவோன் என IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )