இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8
சுற்றின் ஏழாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் (Sir Vivian Richards Stadium)மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழந்து 196 ஓட்டங்களை பதிவுசெய்தது.

அதிகபட்சமாக இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களையும் , விராட் கோலி 37 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 36 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

தொடர்ந்து 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பதிவு செய்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) 40 ஓட்டங்களையும் தன்சித் ஹசன் (Tanzid Hasan) 29 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) 24 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )