அரசியல்வாதிகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரமா ?

அரசியல்வாதிகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரமா ?

அரசியல்வாதிகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக நிராகரிப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

மதுபான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு இதுவரை அரசியல்வாதிகள் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமக்கு சார்பாக செயல்படுவதற்காக இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் மது விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாக அரசாங்கத்திற்கெதிராக சிலர் முன்வைத்துள்ள
குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )