டீ போட்டுத் தராததால் மருமகளை கொன்ற மாமியார்

டீ போட்டுத் தராததால் மருமகளை கொன்ற மாமியார்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் நேற்று (27) காலை பர்சானா டீ போட்டு தரும்படி மருமகளிடம் கூறியுள்ளார். இதற்கு பேகம் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த பர்சானா  தனது மருமகளை கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அஜ்மிரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )