கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு !

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு !

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )