டேவிட் மில்லர் ஓய்வு

டேவிட் மில்லர் ஓய்வு

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவியிருந்தது. 

இந்தத் தோல்வி அந்த அணியின் ஒட்டுமொத்த வீரர்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்தத் தோல்வி குறித்து பேசியிருந்த டேவிட் மில்லர், “நான் மிகவும் திணறிப் போய் விட்டேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க வார்த்தைகளே கிடையாது“ என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் அவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளமை இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )