திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன் ;  அந்தரங்க உறுப்பை துண்டித்த காதலி

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன் ;  அந்தரங்க உறுப்பை துண்டித்த காதலி

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் ஆவார்.

கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.

அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.

இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )