தலவாக்கலை மிளகுசேனை தோட்டத்தில் தீப்பரவல் – 5 வீடுகள் சேதம்

தலவாக்கலை மிளகுசேனை தோட்டத்தில் தீப்பரவல் – 5 வீடுகள் சேதம்

தலவாக்கலை – மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக நேற்றிரவு (04) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தின் முதலாம் இலக்க தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் குடியிருப்பில் வசிப்போரின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )