போதை நிலையங்களாக மாறும் மருந்தகங்கள் !

போதை நிலையங்களாக மாறும் மருந்தகங்கள் !

சிகிச்சையளிக்க பயன்படும் சில வகை மருந்துகளை இளைஞர்கள் மருந்தகங்களில் போதைக்காக கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹெரோயின் போதைப்பொருள் இலங்கையில் குறைவடைந்துள்ளதுடன் , ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )