இறப்பர் தோட்டத்தில் சிறுமியின் சடலம் மீட்பு !

இறப்பர் தோட்டத்தில் சிறுமியின் சடலம் மீட்பு !

நிவித்திகலை, வட்டாபொத்த யொவுன் கிராமத்தில் இறப்பர் தோட்டத்திற்கு  அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் கசிவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த  16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நிவித்திகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வட்டபொத்த, யொவுன் கிராமத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாயார் வட்டாபொத்த விஹாரைக்கு அருகில் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்ததால், கடைக்கு வருமாறு தாயார் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

ஆனால் ​​சிறுமி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், இறப்பர் தோட்டத்தின் நடுவே உள்ள நடைபாதையில் பயணிக்கும் போது, ​​சந்தேகத்துக்கு இடமான முறையில் சிறுமியின் சடலம் கிடந்ததை கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து சிறுமி நடந்து வந்து கொண்டிருந்த போது இறப்பர் தோட்டத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )