பஸ் மீது கார் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

பஸ் மீது கார் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

வெலிமடை பதுளை பிரதான வீதியின் , தவலந்தன்ன அட்டாம்பிட்டிய என்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூதாட்டி உட்பட நால்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )