‘ஒவ்வொருவராக அனுப்புகிறோம் நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் ‘ மதூஷின் மயானத்தில் வைக்கப்பட்ட பதாகை !

‘ஒவ்வொருவராக அனுப்புகிறோம் நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் ‘ மதூஷின் மயானத்தில் வைக்கப்பட்ட பதாகை !

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாகந்துரே மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், “அண்ணா ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

மாகந்துரே மதூஷ் பிரபல பாதாளக் குழு தலைவராக கருதப்படும் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த பதாதையின் கீழ் KPI எனவும் எழுதப்பட்டுள்ளது.

கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட வேளையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளிலும் KPI என எழுதப்பட்டிருந்தது.

இது கஞ்சிப் பானை இம்ரானை அடையாளப்படுத்துவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )