டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் விபரங்கள் வெளியாகின !

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் விபரங்கள் வெளியாகின !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூபோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பென்சில்வேனியாவின் பெத்தேல் கிராமத்தில் வசிப்பவர் என்றும், டொனால்ட் ட்ரம்ப் தனது பிரசார பேரணியை நடத்திய இடத்திலிருந்து 40 மைல் தெற்கே உள்ள பெத்தேல் போர்க் கிராமம் உள்ளது என்றும் நியூபோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நின்று கொண்டிருந்த மேடையில் இருந்து 130 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு உற்பத்தி ஆலையின் மேற்கூரையில் இருந்து இந்த துப்பாக்கிதாரி சுட்டுள்ளார்.

இருப்பினும், ஸ்னைப்பர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து தேடுதலின் போது, ​​அவரது உடலுக்கு அருகில் ஒரு ஏஆர் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

பென்சில்வேனியாவின் பட்லரில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் உள்ள உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் பேரணியில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ரகசிய புலனாய்வு சேவை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )