இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சரக்கு கப்பலில் தீ பரவல்  : ஒருவர் பலி !

இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சரக்கு கப்பலில் தீ பரவல் : ஒருவர் பலி !

தென்மேற்கு கோவா கடற்கரையில் இருந்து 102 கடல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த கப்பலானது குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்துகொண்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் வந்ததாகவும், கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது.

கூடுதலாக இரண்டு ICG கப்பல்கள் கோவாவில் இருந்து தீயை அணைக்கும் முயற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த கப்பலின் பணியாளர்கள், இந்திய கடலோர காவல்படையின் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )