மித்தெனியவில் தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு !

மித்தெனியவில் தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு !

அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொத்தயாய – ஜூலம்பிட்டிய வீதியில் 6 ஆவது மைல்கல் அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கணவர் படுகாயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த குறித்த தம்பதி தங்களது கடையைப் பூட்டி விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )