கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு !

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு !

கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிரேண்ட்பாஸ் – வதுல்லவத்தை பகுதியில் நேற்று மாலை காரில் பயணித்த இருவர் மீது இந்த துப்பாக்கிசூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )