பிரேஸிலில் விமான விபத்து – 62 பேர் பலி!

பிரேஸிலில் விமான விபத்து – 62 பேர் பலி!

பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று (09) விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி லூலா டாசில்வா தெரிவித்துள்ளார்.

சா பாலோ சா்வதேச விமான நிலையமான குவாருல்ஹோஸுக்கு 58 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்களுடன் சென்ற தங்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக வோபாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வின்ஹீடோ நகா்ப் பகுதியில் விபத்துக்குள்ளான குறித்த விமானம் கீழே விழுந்ததாக அந்த நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை குழுக்கள் விரைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )