பம்பலப்பிட்டியில் முச்சக்கரவண்டியிலிருந்து சடலம் மீட்பு

பம்பலப்பிட்டியில் முச்சக்கரவண்டியிலிருந்து சடலம் மீட்பு

பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பொனிபஸ் சிட்னி மனோகரா என்ற 61 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )