பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் !

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் !

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே,யாரை ஆதரவளிப்பதென்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் அனுமதியின்றி தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளராக களம் இறங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமைக்கு எதிராக முன்னாள் எம்.பி. அரியநேத்திரனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )