ஜனாதிபதி ரணில் பங்கேற்கும் முதலாவது பிரசார கூட்டம் இன்று !

ஜனாதிபதி ரணில் பங்கேற்கும் முதலாவது பிரசார கூட்டம் இன்று !

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஆரம்ப பொதுக்கூட்டம்
அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த குழுக்கள் உட்பட இம்முறை ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் முதலாவது பேரணி நேற்று (16) பிற்பகல் 3.00 மணிக்கு குருநாகல் சத்தியவாதி அரங்கில் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான குழுக்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அநுராதபுரம் கடபனஹ பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலையில் நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )