உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவோம் ! 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவோம் ! 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆசிகளை பெற்றுக் கொள்வதற்காக அவர் கொழும்பு ஆயர் இல்லத்திற்கு நேற்று (18) விஜயம் மேற்கொண்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு இடம் பெற்றதா என்பது குறித்தே இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சிக்கல் காணப்படுகின்றன.

எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கா்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு தெளிவுபடுத்துவோம்.

அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பின்னணி மற்றும் அதன் உண்மைத்தன்மை என்பனவற்றை கண்டறிந்து எவ்வித பேதமும் இன்றி அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )