ஐ.சி.சி தலைவராகும் ஜெய் ஷா!

ஐ.சி.சி தலைவராகும் ஜெய் ஷா!

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக (பி.சி.சி.ஐ.) செயலாளர்  ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.சி.சியின் தற்போதைய தலைவராகயிருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடையயிருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சருமானஅமித்ஷாவின் மகன் ஜெய் ஷா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் போட்டிக்கு 16 வாக்குகள் தேவைப்படுவதாகவும், தற்போது இந்த 16 வாக்குகளும் ஜெய் ஷாவுக்கு உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )