விவாதத்தில் பங்கேற்க தயார் : திகதி, நேரத்தை அறிவிக்கவும் !

விவாதத்தில் பங்கேற்க தயார் : திகதி, நேரத்தை அறிவிக்கவும் !

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதத்தில் கலந்துகொள்ள தயாரென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பெஃப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சிக்கு எழுதிய கடிதத்திலேயே தான் இதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஒரு வளர்ந்த ஜனநாயகசமூகத்தில் இருக்க வேண்டிய இத்தகைய விவாதத்தை நடத்துவதற்கான உங்கள் முற்போக்கான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

இது இலங்கை மக்கள் வேட்பாளர்களையும் அவர்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டு
பார்க்க உதவும். பகுத்தறிவு மற்றும் கருத்து அடிப்படையிலான விவாதம் இருக்குமென்று நம்புகிறேன்.

விவாதத்தின் நேரம், திகதி, இடம் மற்றும் வடிவம் குறித்து விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )