தமிழ் தரப்பு பொது வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்ல !

தமிழ் தரப்பு பொது வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்ல !

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” என தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்குமென்பது
இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பாக அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது.

வாக்களிப்பு நடத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை
தமிழ் மக்கள் ஏற்கப் போவதில்லை.

இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்குமாறு தெரிவிப்பார்கள்.

ஆனால் மக்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றதில்லை. இம்முறையும் தேர்தலை மக்கள் புறக்கணிக்கப் போவதில்லை. தமிழ் பொது வேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

அவர் எங்களின் கட்சி உறுப்பினர். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம் , இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்தகால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்திலேயே அறிவித்தோம்.

அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கமையவே வாக்களித்தனர். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )