பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மீது கொலை குற்றச்சாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மீது கொலை குற்றச்சாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan ) மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் (5) ஆம் திகதி நடந்த போராட்டத்தில் ரபிகுல் இஸ்லாம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் சுமார் 150க்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதையடுத்து, இதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )