சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்க்கின்றார்கள் !

சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்க்கின்றார்கள் !

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலர் தனிப்பட்ட காரணங்களுக்
காகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக் கட்சியில் மிகப்பெரும்பாலானவர்கள்
ஆதரவாக இருக்கின்றார்கள்.

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின்
ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களும் சரி
பொது வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார்.
ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூட்டப்பட்டிருக்கின்றன.

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராசாவும் இதனை வரவேற்றிருக்கின்றார்.
ஆகவே தமிழ் அரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து
வரவேற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த்
தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில்
அமைப்புகளுமாக ஒன்றாக இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன.

தமிழ் மக்களுடைய பிரச்னைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்னையைத்தீர்க்க முடியாது என்பதை விளக்கும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாகவுமே தென்னிலங்கையின் வேட்பாளர்
களுக்குத் தெளிவுபடுத்த முடியும்.

எங்களுக்கு இருக்கக்கூடிய ஜனநாயகத் தளம் என்பது இந்த
ஜனாதிபதி தேர்தேலேயாகும்.

அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வடக்கு- கிழக்கு தமிழர்களும் இணைந்து இந்த
செய்தியை சொல்ல விரும்புகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )