அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் !

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் !

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்தமையை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

மெல்பேர்னில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் தாக்கி அப்பெண் கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும் தற்காப்புக்காகவே
அவரை தாக்கினார் எனவுன் அந்த இலங்கையர் வாதாடி இருந்தார்.

எவ்வாறாயினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசா
ரணை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல் பேர்ன் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )