கம்பி வலையில் சிக்கி சிறுத்தை பலி

கம்பி வலையில் சிக்கி சிறுத்தை பலி

மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அறுகாமையில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது .

சிறுத்தை வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )