வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு விரிகுடாவில், நிலைகொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் மணித்தியாலங்களில், வடக்கு ஆந்திரா மற்றும் இந்தியாவின் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்தத் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மீனவர்களும் கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )