வாக்குச்சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வாக்குச்சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு சுமார் 8,000 பேரை பணியில் அமர்த்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நேற்றுக் காலையிலிருந்து தபால் ஊழியர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளை உரிய முகவரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பணிகளுக்கு தபால் திணைக்களத்துக்கு உரித்தான வாகனங்களும் தேர்தல் ஆணைக்குழு வால் வழங்கப்பட்ட வாகனங்களும் பயன்படுத் தப்படவுள்ளன. விசேட பாதுகாப்புடன் வாக்குச் சீட்டுகள் கொண்டு செல்லப்படவுள்ளன. இன்று முதல் உரிய தபால் அலுவலகங்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )