ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் ‘பவ்ரல்’ அமைப்புக்கு 1,300 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் ‘பவ்ரல்’ அமைப்புக்கு 1,300 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளொயுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குகின்றன என அவர் கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாராய்ச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், இம்முறை ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 15 -இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளனர்
என அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )