சிறீதரனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்த திலகர்

சிறீதரனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்த திலகர்

ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்திற்கு இன்று (16) விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறிதரன் எம்.பியிடம் அவர் கையளித்துள்ளார்.

இதேபோன்று யாழில் பலரையும் சந்தித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )