பாடசாலை சீருடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

பாடசாலை சீருடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

ஜனவரி 20ஆம் திகதி பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டிற்கான சீன உதவி பெறும் பாடசாலை சீருடை துணிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, சீன அரசாங்கம் 2025 பாடசாலை புதிய தவணைக்கு முன்னர் 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடைகளையும், 825 பிரிவேனாக்களுக்கான சீருடைகளையும் இலவசமாக வழங்க உள்ளது.

அதன்படி, சீருடைத் துணிக்கான முதல் இருப்பு நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது இருப்பு நவம்பர் 21-ஆம் திகதியும், மூன்றாவது இருப்பு டிசெம்பர் 20ஆம் திகதியும் பெறப்படும்.

இந்த நிதியுதவிக்காக சீன அரசாங்கத்திற்கும் சீன தூதுவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )