தேசபந்து தென்னகோனின்<span style="font-weight: normal;"> </span>இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோனின் இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.

இந்த இடையீட்டு மனு இன்று யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன்படி, இந்த உத்தரவை அறிவித்த உயர் நீதிமன்ற அமர்வின் தலைவர் யசந்த கோதாகொட, இந்த இடையீட்டு மனுவின் உள்ளடக்கம் முதல் பார்வையில் ஒரு வழக்குக்கான ஆதாரம் இல்லாததால் நிராகரிக்கப்படுவதாகத் அறிவித்திருந்தார்.

பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோரே இந்த மனுவினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )