நான் ஜனாதிபதியானால்   பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்

நான் ஜனாதிபதியானால் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்

” நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்போவதில்லை.” என சுயாதீன வேட்பாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாக திணிக்கப்பட்டதை ஏற்கமுடியாது.

13 வழங்கப்படும் என சஜித் கூறுகின்றார். அதேபோல ஐக்கிய நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால் ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கப்போவதில்லை.

ஆனால் 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும்வரை மேற்படி அதிகாரங்களை வழங்கமுடியாது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )