புதிய முதல் மந்திரியாக 21ம் திகதி பதவியேற்கிறார் அதிஷி

புதிய முதல் மந்திரியாக 21ம் திகதி பதவியேற்கிறார் அதிஷி

புது டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன்பிணை வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுடெல்லியின் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் புதுடெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது இராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் கவர்னரிடம் கொடுத்தார்.

இதையடுத்து, புதுடெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான திகதியை செப்டம்பர் 21-ம் திகதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டெல்லி புதிய முதல்-மந்திரியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) 21 ஆம் திகதி அதிஷி பதவியேற்பார், அவருடன் மற்ற மந்திரிகளும் பதவியேற்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )