அரச வாகனங்களை  ஒப்படைத்தார் டயானா

அரச வாகனங்களை  ஒப்படைத்தார் டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

மேலும், வரும் 21ம் திகதி காகித ஆவணங்களை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லத்தினை இன்னும் கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த 08ம் திகதி தீர்ப்பளித்திருந்தது. இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த 11ம் திகதி டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்லவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )