குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி சிக்கினார்

குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி சிக்கினார்

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை  பிரசவித்த 15 வயதுடைய சிறுமி ஒருவர்  குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற  நிலையில்,  குறித்த சிறுமி நேற்று (14) பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளார். 

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுமியின் தாயரும் சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.

🛑TODAY TOP NEWS 🛑 குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி குழந்தையை விட்டுவிட்டு தாயுடன் தப்பி ஓட்டம்! #TODAYTOPNEWS…

Posted by People News தமிழ் on Tuesday 14 May 2024

 சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்ட நிலையில், அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )