இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்

இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளரும் என்ற பெருமை பெற்ற ஆயிஷா ஜுனைதீன் காலமானார்.

முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வி ஏ .கபூரின் சிபார்சில் முதன் முதலாக “பிஞ்சு மனம்” சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு பெற்று, சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள் பிரவேசித்து, முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளரானார்.தொடர்ந்து பகுதி நேர அறிவிப்பாளரானார். இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் இவரே.

ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பமான காலத்திலேயே, தொலைக் காட்சியில் செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு ரூபவாஹினியில் ஒளிபரப்பான பல பிரபல நாடங்களுக்கு இவர்
எழுதிய தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பே காட்சிபடுத்தப்படும்.தமிழ் மொழியோடு, ஆங்கிலம், சிங்கள மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )