இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுதினம் (04) இலங்கை வரவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார்.

இவ்விஜயத்தின்போது டில்லி வருமாறு இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை, ஜனாதிபதி அநுரவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை, தமிழ்க் கட்சிகளுடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )