சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய குழு

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய குழு

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையில் பல்வேறு பணியாளர்களிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக குறித்த பணியாளர்கள் மற்றும் உரிய தொழிற்சங்கங்களால் பல கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றை கருத்திற் கொண்டு, குறித்த ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, 2025ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூலம் அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )