பஸ் விபத்தில் 27 பேர் படுகாயம்

பஸ் விபத்தில் 27 பேர் படுகாயம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ், எதிர்த்திசையிலிருந்து சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெறறுள்ளது.

இந்ந விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )