சிறுவனின் உயிரை பறித்த ஹேர் ட்ரையர்

சிறுவனின் உயிரை பறித்த ஹேர் ட்ரையர்

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

புத்தளம் , ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் ( வயது 17) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், சம்பவத்தினத்தன்று தனது வீட்டில் குளித்து விட்டு , முடி உலர்த்தி (ஹேர் ட்ரையர்) மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரம் தாக்கியுள்ளது.

புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலை மாணவரான இவர், கடந்த மாதம் நிறைவடைந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )